அடுத்த 3 மணி நேரத்திற்கு17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை நகரின் பல்வேறு இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, குமரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கும் மழை!

ஏற்கனவே, இன்று மாலை சென்னை நுங்கம்பாக்கம், தி.நகர், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கோயம்பேடு, வடபழனி, அரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், பிற்பகலுக்கு மேல் மழை கொட்டித்தீர்த்தது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.