#BREAKING: 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தென்மேற்குப் பருவக்காற்றால் 16 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. தெற்கு கடலோர ஆந்திர மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு  தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, ராணிப்பேட்டை , கள்ளக்குறிச்சி கோவையில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இதர மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan