வரும் 10-ஆம் தேதி 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!

வரும் 10-ஆம் தேதி தமிழக மற்றும் புதுச்சேரியில் கனமழையும், 11ஆம் தேதி மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு.

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வரும் 10-ஆம் தேதி தமிழக மற்றும் புதுச்சேரியில் கனமழையும், 11ஆம் தேதி மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில், வரும் 10-ஆம் தேதி குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், விழுப்புரம், சிவகங்கை உட்பட 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் இருந்த ஆட்களுக்கு இடி மின்னணுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment