BREAKING:கொரோனாவால் உயிரிழந்த குடும்பத்திற்கு மத்திய அரசு தலா ரூ.4,00,000 அறிவிப்பு.!

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்ட்டது.அதன் பின்னர் கொரோனா வைரஸ் சீனா மட்டுமல்லாமல் 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுருத்தி வருகிறது.

தற்போது கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி உள்ளது. கொரோனாவை தடுக்க மத்திய , மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 10-ம் தேதி கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 76 வயது முதியவர் உயிரிழந்தார்.

இவரை தொடர்ந்து நேற்று டெல்லியில் கொரோனா பாதிப்பால் சிகிக்சை பெற்றுவந்த 69 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இந்த மூதாட்டி உயிரிழப்பை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

மேலும்  கொரோனாவால் இந்தியாவில்   85 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரசால்  உயிரிழந்த குடும்பத்திற்கு மத்திய அரசு தலா ரூ.4,00,000  அறிவித்துள்ளது.

author avatar
murugan