மாவோயிஸ்டுகளுக்கு ஒரு நாளும் மன்னிப்பே கிடையாது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு திட்டவட்டம் .
ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையும் தீவிரவாதிகள், மாவோயிஸ்ட்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. வன்முறையை கைவிட்டு, ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்துள்ள தீவிரவாதிகள் மற்றும் மாவோயிஸ்ட்களுக்கு பொது மன்னிப்பு மற்றும் மறுவாழ்வு திட்டம் ஏதும் உள்ளதா என உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.இதற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்து மூலம் பதிலளித்துள்ளார். அதில் நக்சலைட்களை கட்டுப்படுத்தவும், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சூழ்நிலைகளை மேம்படுத்தவும் மத்திய அரசு பல முனை திட்டங்களை செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் அட்டகாசமும், வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்ட்களின் அட்டகாசமும் உள்ளது. அவர்களின் கண்மூடித்தனமான தாக்குதலால் இந்திய ராணுவ வீரர்களின் விலை மதிப்பற்ற உயிர் பறிபோகிறது. எனினும் மாவோயிஸ்ட்களின் பிரச்சினையைத் தீர்க்க அவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் அரசியலமைப்புச் சட்ட விதிகளின்களின்படியே அரசு நடந்து வருவதாக கூறியுள்ளார். மேலும் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையும் மாவோயிஸ்ட் குழுக்களுக்கு மறுவாழ்வுத் திட்டங்களையும் மத்திய அரசு அறிவித்து செயல்படுத்தி வருவதாக கூறியுள்ளார்.
source: dinasuvadu.com
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…