பட விளம்பரத்துக்காக பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகை!

நடிகை ஆஷா சரத் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல மலையாள படங்களில் நடித்துள்ளார். ஆஷா தமிழில் கமலஹாசன் நடித்த பாபநாசம் படத்தில் போலீஸ் அதிகாரியாக  நடித்துள்ளார். மேலும் இவர் தூங்காவனம் படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது இவர் எவிடே என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று ரிலீஸ் ஆகிறது. இதனையடுத்து, இவர் மேக்கப் இல்லாமல் கலங்கிய முகத்துடன், தனது கணவரை காணவில்லை. அவரை கண்டுபிடித்தால் கட்டப்பனை போலீசில் தெரிவிக்க வேண்டும் என தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து, இதை உண்மை என நம்பி ஆயிரத்துக்கும் அதிகமானோர் இதனை ஷேர் செய்தனர். அதன் பின் இது படத்துக்கான விளம்பரம் என்று தெரிந்ததும் ஏமாற்றம் அடைந்தனர். இதனையடுத்து, இவரது இந்த பதிவுக்கு கடுமையான விமர்சனங்களும் எழுந்தது.

மேலும், இதுகுறித்து ஸ்ரீஜித் பெருமனா என்ற வழக்கறிஞர் இடுக்கி மாவட்ட போலீஸ் எஸ்பியிடம் புகார் கொடுத்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.