ராகுல்காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தங்க தேர் இழுத்த புதுவை முதல்வர்…!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தங்கத்தேர் இழுத்துள்ளார். ராகுல் காந்தி இன்று தனது 49 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
அவரது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் அவரது தொண்டர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரியில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி அவர்கள் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுத்து ராகுல் காந்தி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.