சிபிஎல் தொடர் ! வீரர்களுக்கு கொரோனா டெஸ்ட்

சிபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது,

இந்த வருடம் சிபிஎல் போட்டி வருகின்ற ஆகஸ்ட் 18-ஆம் தேதி தொடங்கவுள்ளது .33 ஆட்டங்களாக டிரினிடாடில் உள்ள இரு மைதானங்களில் நடைபெறவுள்ளன. சிபிஎல் இறுதி போட்டி வருகின்ற செப்டம்பர் மாதம் 10ம் தேதி நடைபெறுகிறது.  இந்த சிபிஎல் தொடரில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நிர்வாகிகள் போன்ற 168 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று முடிவுகள் வந்துள்ளது என்று போட்டியின் இயக்குநர் மைக்கேல் ஹால் கூறியுள்ளார்.

 இந்த சிபிஎல் தொடரில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நிர்வாகிகள் அனைவரும் 14 நாட்களுக்கு தனிமை படுத்தப்படுவார்கள் அதன் பிறகு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மீண்டும் எடுக்கப்படும், அதில் யாருக்காவது கொரோனா தொற்று இருந்தால் வேறொரு இடத்திற்கு தனிமைப்படுத்தப்படுவர் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த வருட சிபிஎல் டி20 போட்டியிலில் சொந்தக் காரணங்களுக்காக கிறிஸ் கெயில் விலகுவதாக கூறியுள்ளார். மேலும் டிகேஆர் அணி இந்த வருட சிபிஎல் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் 48 வயதான பிரவீன் டாம்பே தேர்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.