ஜூலை 23-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்திவைப்பு..!

ஜூலை 23-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் குழு தலைவர் ஹல்தர், மேகதாது உள்ளிட்ட அணை விவகாரங்கள் குறித்து விவாதிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு முழு அதிகாரம் இருக்கிறது. வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆணையத்தின் கூட்டத்தில், அனைத்து விவகாரங்களுக்கு விவாதிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், ஜூலை 23-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணையக் கூட்டத்தில் மேகதாது விவகாரத்தை விவாதிக்க கூடாது என்ற தமிழக அரசின் தொடர் அழுத்தம், இவ்விவகாரம் தொடர்பாக நாளை அனைத்துகட்சி உறுப்பினர்கள் மத்திய அமைச்சருடன் சந்திப்புகள் காரணம் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment