காவிரி மேலாண்மை வாரியம் – முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட 7 பேர் விடுவிப்பு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராடிய வழக்கில் இருந்து முதலமைச்சர் உள்ளிட்ட 7 பேர் விடுவிப்பு.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்திய வழக்கில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட 7 தலைவர்களை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்தியாக முக ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்குகளை திரும்பப் பெறுவதாக காவல்துறை கூறிய நிலையில், வழக்கை ரத்து செய்தது நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்