மறு உத்தரவு வரும் வரை கேட்டரிங் சர்வீஸ் நிறுத்தம்.!

எக்ஸ்பிரஸ் ரயில்களில் வழங்கப்படும் கேட்டரிங் சர்வீஸ் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பயணிகள் ரயில்களும் நாளை இரவு முதல் ஞாயிறு இரவு 10 மணிவரை நிறுத்தப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மிகிக் குறைவான டிக்கெட்டுகள் முன்பதிவானதால் நாடு முழுவதும் நேற்று முதல் முதல் மார்ச் 31-ம் தேி வரை 168 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதையெடுத்து நேற்று முன்தினம் பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றினர்.அப்போது நாளை ஒருநாள் நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு முறையை பின்பற்ற வேண்டும்  பிரதமர் மோடி என கேட்டுக்கொண்டார்.

இதனால் அனைத்து பயணிகள் ரயில்களும் நாளை இரவு  12 மணி முதல் இரவு 10 மணிவரை நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியாவில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஐ எட்டியது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 பேர் உள்ளது.

 

author avatar
murugan