ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகள் நடத்த கோரிய வழக்கில், பள்ளிக்கல்வி செயலருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு அரசு தமிழ்வழி பள்ளிகளில் ஆங்கில பேச்சு வகுப்புகளை நடத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் அப்பாவு அளித்த மனுவை 8 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென்று தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.