அன்புமணி ராமதாசுக்கு எதிரான வழக்கு ரத்து!

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதாவது, கடந்த 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தேர்தல் பரப்புரையின் போது “சொந்தங்களே சிந்திப்பீர்” என்ற CD-யை வினியோகித்ததாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கை தற்போது ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் விதிகளை மீறி பிரச்சார குறுந்தகடு விநியோகித்ததாக அன்புமணி ராமதாஸ் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்