மீண்டும் ஜாமீன் பெற்றார் குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி ..!

மீண்டும் ஜாமீன் பெற்றார் குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி ..!

குஜராத் மாநில இளம் தலித் தலைவரும், ராஷ்ட்ரிய தலித் அதிகார மஞ்ச் எனும்  அரசியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமாகியவர் தான் ஜிக்னேஷ் மேவானி. இவர் பாதிக்கப்படக்கூடிய தலித் சமூக மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டு பெருமளவில் மக்கள் மத்தியில் அறியப்பட்ட ஒரு அரசியல்வாதியாக இருந்து வருகிறார்.

இவர் பட்டியலின மக்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி குரல் எழுப்பி வருகிறார். இந்நிலையில் காங்கிரஸ் ஆதரவுடன் கடந்த 2017 ஆம் ஆண்டு வாக்கெட் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட மேவானி 84 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

கடந்த 21 ஆம் தேதி நள்ளிரவு திடீரென கைது செய்யப்பட்ட மேவானிக்கு, 25-ஆம் தேதி ஜாமீன் கிடைத்தது. ஜாமீன் கிடைத்த சில மணி நேரங்களிலேயே மேவானி மீண்டும் மற்றொரு புதிய வாழ்க்கில் கைது செய்யப்பட்டார். தற்பொழுது மேவானிக்கு இன்று மீண்டும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal
Join our channel google news Youtube