நெஞ்சு பொறுக்குதில்லையே..! – அமைச்சர் மனோ தங்கராஜ்

நெஞ்சு பொறுக்குதில்லையே,இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்விட். 

கர்நாடகா சட்டப்பேரவையில்,  மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், விவேகானந்தர், சர்தார் வல்லபாய் படேல் உள்ளிட்ட 7 உருவப்படங்களை முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார். இந்த உருவப்படங்களில் சாவர்க்கரின் படமும் இடம்பெற்றுள்ளது.

இது தற்போது சர்ச்சையாகியுள்ள நிலையில், இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நெஞ்சு பொறுக்குதில்லையே,இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால், தேச தந்தை மஹாத்மா காந்தி கொலை வழக்கில் சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சாவர்க்கர் புகைப்படம் காந்தி புகைப்படத்தை விட பெரியதாக பா. ஜ. க ஆளும் கர்நாடக சட்டப் பேரவையில்!!’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment