#BREAKING:உறவினர்களுடன் நளினி, முருகன் ஒரு நாள் பேச அனுமதியளிக்க முடியுமா..? மத்திய அரசு பதில் தர உத்தரவு.!

வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் நளினி, முருகன் ஒரு நாள் பேச அனுமதியளிக்க முடியுமா? மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் நளினி உட்பட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், முருகனின் தாய், சகோதரியிடம்  முருகனும், நளினியும் பேச அனுமதி கோரிக்கை வைத்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் நளினி, முருகன் பேசுவதற்கு ஒருநாள் அனுமதிக்க முடியுமா..? என கேள்வி எழுப்பி ஆகஸ்ட் 3-ஆம் தேதி மத்திய அரசு பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

author avatar
murugan