குஜராத்தில் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடையவுள்ளது.
குஜராத்தில் சட்டசபை தேர்தல் 2 கட்டமாக டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் மொத்தமுள்ள 182 இடங்களில் முதற்கட்டமாக டிசம்பர் 1ஆம் தேதி 89 தொகுதிகளுக்கும், 2 கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
இதில், முதற்கட்டமாக நடைபெறும் 89 தொகுதிகளுக்கான பிரச்சாரம் இன்று மாலை உடன் நிறைவடைய உள்ளது. இதன் காரணமாக, முக்கிய தலைவர்கள் தீவிர சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 27 வருடமாக ஆட்சியில் இருக்கும் பாஜக தனது வெற்றியை இந்த முறையும் பதிவு செய்து 7வது முறையாக குஜராத்தில் ஆட்சி கட்டிலில் அமர முயற்சி செய்கிறது.
அதே போல காங்கிரஸ் கடந்த சட்டசபை தேர்தலில் கிட்டத்தட்ட வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியை தழுவியதால் இந்த முறை வெற்றிபெறும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. (கடந்த முறை பாஜக 99 காங்கிரஸ் 77).
இந்த இரு முனை போட்டியை மும்முனை போட்டியாக மாற்ற களமிறங்கிய கட்சி என்றால் அது ஆம் ஆத்மி தான். டெல்லி, பஞ்சாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தி ஆட்சியை கைப்பற்றிய முனைப்பில் தற்போது குஜராத் பக்கம் வந்துள்ளது ஆம் ஆத்மி. ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்ததும் வருகிறார்.
ஆதலால், இந்த முறை குஜராத் சட்டசபை தேர்தலில் யார் ஜெயிப்பார் என்கிற எண்ணம் வடமாநிலங்கள் தாண்டி இந்தியா முழுவதும் ஊற்று நோக்க வைத்துள்ளது. இன்று மாலை முதற்கட்ட தேர்தல் தொகுதிகளுக்கு முடிந்ததும், அடுத்த கட்ட தேர்தல் பிரச்சாரத்திற்கு பிரதான கட்சிகள் தயாராகி வருகின்றன.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…