முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று  தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில், நேற்று  ஒரே நாளில் புதிதாக 1974  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 44,661 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்விளைவாக  முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று  நண்பகல் 12 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.