நடிகர் விஷாலின் தந்தையை ஏமாற்றிய தொழிலதிபர் கைது!

நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவரின் தந்தை ஜி.கே.ரெட்டியை கல்குவாரி உரிமையாளர் வடிவேலு ஏமாற்றியுள்ளார்.
இதனையடுத்து, ஜி.கே.ரெட்டி, கல்குவாரி உரிமையாளரான வடிவேலு, கருங்கால்  தருவதாக கூறி, இதுவரை அந்த பொருட்களை தராமல், ரூ.86 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார். இந்நிலையில், ஜி.கே.ரெட்டி அளித்த புகாரின் பேரில் தொழிலதிபர் வடிவேலு கைது செய்யப்பட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.