தாய்ப்பால் போல் சுத்த அரசியல் செய்யும் நல்லகண்ணு ஐயா! ரஜினிமக்கள் மன்றத்துக்கு வாழ்த்து! நடிகர் விவேக் ட்வீட்!

சென்னையில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில், தண்ணீர் இன்றி தவிக்கும் மக்களுக்கு, ரஜினி மக்கள் மன்றம் சார்பாக லாரிகளில் தண்ணீர் கொண்டு போய் கொடுத்து, தங்களால் முடிந்த அளவு உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தினரை, நல்லகண்ணு ஐயா அவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில், “தாய்ப்பால் போல் சுத்த ரசிய செய்யும் நல்லகண்ணு ஐயாவே வந்து வாழ்த்தியது, ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, ரஜினி சாருக்கே பெருமை தான். வாழ்க உங்கள் சமூக தொண்டு!” என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.