#BREAKING நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாருக்கு ஓராண்டு சிறை தண்டனை..!!

இது என்ன மாயம் பட தயாரிப்புக்காக ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு ரூ. 1.5 கோடி மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் வாங்கியது. கடனை திருப்பியளிப்பதில் மேஜிக் பிரேம் நிறுவனம் செக் மோசடி செய்துள்ளது.  அந்நிறுவனத்தின் பங்குதாரர்களாக சரத்குமார்,ராதிகா சரத்குமார் உள்ளனர். இவர்கள் வங்கிக்கணக்கில் பணம் இல்லாததால் கடனுக்காக தந்த 7 காசோலைகள் திரும்பி வந்தன.

இதனால் செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை என்று சென்னை எம்பி எம்எல்ஏ நீதிமன்றம் தீர்ப்பு.

மோசடி வழக்கில் சரத்குமாருக்கு 7 வழக்குகளில் தலா ஓராண்டு சிறை  தண்டனை விதித்து சென்னை எம்பி எம்எல்ஏ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராதிகாவுக்கு 2 வழக்குகளில் தல ஒரு வருடம் மேஜிக் பிரேம் நிறுவன பங்குதாரர் லிஸ்டன் ஸ்டீபனுக்கு 2 வழக்குகளில் ஒரு வருடமும் சிறை.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.