#BREAKING :தமிழகம் முழுவதும் ஜூன் 30 வரை மாவட்டங்களுக்கிடையே போக்குவரத்துக்கு தடை – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகம் முழுவதும் ஜூன் 30 வரை மாவட்டங்களுக்கிடையே போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக  தமிழக முதலமைச்சர்   பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்களுடனான ஆலோசனை குறித்து முதலமைச்சர் பழனிசாமி  விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  “கொரோனா பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்”.”கொரோனா தொடர்பாக பிரதமருடன் 6 முறை, ஆட்சியர்களுடன் 7 ஆலோசனை நடத்தப்பட்டது”.

தமிழகம் முழுவதும் 75,000 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன”. “தமிழகத்தில் குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருகிறது” .சென்னையில் குறுகலான தெருக்களில் அதிகளவில் மக்கள் வசிக்கின்றனர்.நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது .இந்த நாட்களில் அனைத்து விதமான போக்குவரத்திற்கும்  தடை செய்யப்பட்டுள்ளது .ஒரு மாவட்டத்தை விட்டு மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் இனி இ-பாஸ் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.