மேற்குவங்க மாநிலத்தின் வாக்கு எண்ணிக்கையில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் தொடர் முன்னிலை வகித்து வருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு எட்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், பிரதமர் மோடிக்கும் இடையிலான நேரடிப் போட்டியாகவே இந்த தேர்தல் மாறிவிட்டது. காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளும் களத்தில் இருந்தாலும் அவை ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு கணிப்புகள் இல்லை.
இந்த தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் வென்றால், அக்கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும். ஆனால், மேற்கு வங்க மாநிலத்தில் தடம் பதிக்க பாரதிய ஜனதா கட்சி முயன்று வருகிறது. இந்த நிலையில், இன்று தொடங்கிய வாக்கு எண்ணிக்கை முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. ஆரம்ப கட்டத்தில் வெளியாகியிருக்கும் அதிகாரபூர்வமற்ற முன்னிலை நிலவரங்களில் மாநிலத்தில் கடும் போட்டி நிலவுவது தெரிகிறது. தற்போதைய நிலவரப்படி, திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணி 147 இடங்களிலும், பாஜக கூட்டணி 116 இடங்களிலும், காங்கிரஸ், சிபிஎம் கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
இதில், மற்றவைகள் 3 இடங்களில் முன்னிலை பபெற்று வருகிறது. மேற்கு வங்கம் பாஜகவுக்கும் திரிணாமூல் காங்கிரஸ்க்கும் இடையில் கடுமையான, போட்டி நிலவி வருவதால் முடிவுகள் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்படுகின்றன. மேற்கு வங்கம், இந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்று என்பதும், ஆகையால், யார் அதிகம் எம்.பி.க்களைப் பெறப் போகிறார்கள் என்பதும் ஆகும்.
இதுவரை மேற்குவங்கத்தில் தடம் பதிக்க முடியாத பாஜக, இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க பார்க்கிறது. இதனால், மம்தா பானர்ஜி மற்றும் பிரதமர் மோடி இடையே சில கசப்பான மோதல் நடந்து வருகிறது. ஆகையால், மேற்குவங்க சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு யார் வெல்ல போவது என்று ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…