#BREAKING: தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் கூட வாய்ப்பு! முக்கிய அறிக்கைகள் தாக்கல்!

ஜெயலலிதா மரணம் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி விசாரணை அறிக்கை கூட்டத்தொடரின் இறுதி நாளில் தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அடுத்த மாதம் 2வது வாரத்தில் கூட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக கூட்டத்தொடரை 5 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. 6 மாதத்துக்கு ஒருமுறை சட்டப்பேரவை கூட்ட வேண்டும் என பேரவை விதி உள்ளதால் அக்டோபரில் கூட்டத்தொடர் நடக்க வாய்ப்பு உள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு சட்ட மசோதா கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசிடம் சமர்ப்பித்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணை அறிக்கை மற்றும் ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான அறிக்கை கூட்டத்தொடரின் இறுதி நாளில் தாக்கல் செய்யப்பட உள்ளது என்றும் தகவல் கூறப்படுகிறது. ஜெயலலிதா மரண அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணை அறிக்கைகளை சட்டப்பேரவையில் வைத்து உரிய நடவடிக்கை எடுப்போம் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment