#BREAKING : மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு எதிர்ப்பு….!

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான எந்த ஆரம்பக்கட்ட பணிகளையும் கர்நாடகா மேற்கொள்ள கூடாது.

காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 12 வது ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த கூட்டத்தில் இந்த மாதத்திற்கான நீர் திறப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. காவிரியில் இருந்து தேவைப்படாத உபரி நீரை மட்டும் திறந்து விட்டுவிட்டு, தேவைப்படும் போது, கணக்காக கர்நாடக அரசு காட்டுகிறார்கள் என்று குற்றசாட்டியுள்ளனர்.

மேலும், மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறிய கருத்துக்கு காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ள நிலையில், மேகதாது மட்டுமன்றி காவிரியின் குறுக்கே எந்த இடத்தில் அணை கட்டுவது என்றாலும் எங்கள் அனுமதி தேவை என தெரிவித்துள்ளனர்.

மேலும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான எந்த ஆரம்பக்கட்ட பணிகளையும் கர்நாடகா மேற்கொள்ள கூடாது என காவிரி நதி நீர் ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.