#BREAKING: மீண்டும் ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனு தள்ளுபடி..!

கேரளா தங்கக்கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனு தள்ளுபடி.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் வந்த பார்சலில் ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சரித், சந்தீப் நாயர் மற்றும்  பைசல் பேரத் ஆகியோர் மீது தீவிரவாத நிதி திரட்டல், சட்டவிரோத தடுப்பு செயல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஸை விசாரணை செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, நேற்று மேலும் மூன்று நாட்கள் விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

இந்நிலையில்,  ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனுதாக்கல் செய்தார்.  கேரள பொருளாதார குற்றவியல் நீதிமன்றம்  இந்த ஜாமீன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது ,  நீதிபதிகள்  என்.ஐ.ஏ முன்வைத்த ஆதாரங்களை கருத்தில் கொண்டு ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனுவை  மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதுவரை 3- முறை ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனுவை என்ஐஏ சிறப்பு நீதிமன்றமும் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. கடந்த ஆண்டு நவம்பர் முதல் ரூ.100 கோடி  மேல் மதிப்புள்ள தங்கத்தை  கடத்தியதாக கூறப்படுகிறது. இதனால், இந்த வழக்கில் முழுமையான விசாரணை தேவை என்று கூறி, ஜாமீன் மனுவை என்ஐஏ கடுமையாக எதிர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan