#BREAKING: அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா.!

ராம் ஜன்மபூமி அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்யா கோபால் தாஸ்க்கு கொரோனா உறுதி.

ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்யா கோபால் தாஸ் கொரோனா  சோதனை செய்துள்ளார். இந்நிலையில் சோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது. தற்போது அவர் மூச்சுத் திணறல் குறித்து  மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.

அயோத்தியில் உள்ள ராமர் கோயில் விழாவில் 100 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்ட பூமி பூஜையில் தாஸ் தீவிரமாக ஈடுபட்டார். இதற்கிடையில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோபால் தாஸ்க்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க மேதாந்தாவின் டாக்டர் ட்ரேஹனுடன் பேசினார். சிறந்த மருத்துவ சிகிச்சையை வழங்குவதற்கான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அவர் மதுரா மாவட்டதிற்கு உத்தரவிட்டுள்ளார்.

2003- ஆம் ஆண்டில் ராம்சந்திர பரம்ஹான்ஸின் மரணத்திற்குப் பிறகு ஜனவரி 1993 இல் விஸ்வ இந்து பரிஷத் உருவாக்கிய அறக்கட்டளையான ராம் ஜன்மபூமி நியாஸை அவர் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.