#BREAKING: கரும்பு விவகாரம் – ஜனவரி 2ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!

பொங்கல் தொகுப்பில் செங்கரும்பு வழங்காததை கண்டித்து திருவண்ணாமலையில் ஜனவரி 2ம் தேதி ஆர்ப்பாட்டம்.

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்காததை கண்டித்து அதிமுக சார்பில் ஜனவரி 2-ஆம் தேதி திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. செங்கரும்பை தமிழக அரசு கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எனவே, விவசாயிகளிடமிருந்து செங்கரும்பை கொள்முதல் செய்து மக்களுக்கு தரக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். மேலும், பொங்கல் பரிசாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5,000 வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். எதிர்க்கட்சியாக இருந்தபோது ரூ.5,000 வழங்ககோரிய திமுக, தற்போது ரூ.1000 மட்டும் அறிவித்தது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment