#Breaking:சற்று முன்னர்…மணிப்பூரில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

மணிப்பூரில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

மணிப்பூரில் 60 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ள நிலையில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.இந்நிலையில்,மணிப்பூரில் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது.அதன்படி,38 சட்டப்பேரவை தொகுதிகளில் தற்போது வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

173 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில்,அதில் ஹீங்காங்கில் இருந்து முதல்வர் என் பிரேன் சிங், சிங்ஜமேயிலிருந்து சபாநாயகர் ஒய் கெம்சந்த் சிங், யூரிபோக்கில் இருந்து துணை முதல்வர் யும்னம் ஜாய்குமார் சிங் மற்றும் நம்போலில் இருந்து மாநில காங்கிரஸ் தலைவர் என் லோகேஷ் சிங் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக கருதப்படுகின்றனர்.

இந்த தேர்தலில் 22 லட்சம் வாக்காளர்கள் கொரோனா கட்டுபாட்டு  நடவடிக்கைகளை பின்பற்றி வாக்களிக்க உள்ளனர்.அதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.