#BREAKING: இலங்கையில் பெரும்பான்மையை இழக்கும் ஆளும் கட்சி!

இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கிறது மகிந்த ராஜபக்ச அரசு.

இலங்கையில் ஆளும் (மகிந்த ராஜபக்ச அரசு) எஸ்எல்பிபி கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பானமையை இழக்கிறது. ஆளும் கட்சிக்கு வழங்கிய ஆதரவை கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றாக வாபஸ் பெறுகின்றன. இதனால் இலங்கையில் ஆளும் கட்சி பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்னதாக இலங்கை சுதந்திர கட்சி மற்றும் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய இரண்டு முக்கிய கட்சி ஆளும் கட்சிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றது.

இலங்கையில் 40க்கும் மேற்பட்ட எம்பிக்கள் ஆளும் கட்சிக்கு வழங்கி வந்த ஆதரவை திரும்ப பெற்றது. இதனைத்தொடர்ந்து, இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடிய நிலையில், ஆளும் எஸ்எஸ்பிபி கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பானமையை இழக்கிறது. 225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்துக்கு 113 பேர் ஆதரவு தேவை என்ற நிலையில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்