#BREAKING: செப்.15 முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 – நிதியமைச்சர் அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு.

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வரும் நிதியாண்டில் அமல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.  வரும் நிதியாண்டு முதல், தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்த நாளன்று மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைப்பார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், புரட்சியை ஏற்படுத்தும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்துக்கு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதியானவர்கள் குறித்த வரைமுறைகள் அறிவிக்கப்படும் எனவும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment