#BREAKING : பெட்ரோல், டீசல் விலை குறைப்பு – மகாராஷ்டிரா முதல்வர் அதிரடி..!

மகாராஷ்டிராவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹5, டீசல் விலை லிட்டருக்கு ₹3 குறைக்கப்படுவதாக முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியில் இருந்த சிவசேனா கட்சி தனது சொந்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களால் அதிருப்தியை எதிர்கொண்டு ஆட்சியை இழந்த நிலையில், முதல்வர் பதவியிலிருந்து உத்தவ் தாக்கரே விளக்கினார். இதனை தொடர்ந்து, கடந்த ஜூன் 30-ஆம் தேதி மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், பதவியேற்று சில நாட்களே ஆன நிலையில், மகாராஷ்டிராவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹5, டீசல் விலை லிட்டருக்கு ₹3 குறைக்கப்படுவதாக முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment