#BREAKING: ரஜினியின் “அண்ணாத்த” படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்.!

ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 15 முதல் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஐதராபாத்தில் ரஜினி – நயன்தாரா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், 8 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வந்த படப்பிடிப்பில் ரஜினி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து வந்தனர்.

இதனிடையே, ரஜினி ஜனவரி மாதம் புதிய கட்சி தொடங்கயிருக்கிறார். அதற்கான அறிவிப்பு வரும் 31-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. புதிய  கட்சி அறிவிப்புக்கு முன்னதாக அண்ணாத்த படப்பிடிப்பை முடித்துவிட நடிகர் ரஜினி திட்டமிட்டுருந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த சென்னை திரும்புவதாக தகவல் ஊற்றப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்