#Breaking:ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு அகற்றம் – உச்சநீதிமன்றம் நாளை விசாரணை!

சென்னை ஆர்.ஏ.புரத்தில் பெரும்பாலான ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வசித்து வரும் நிலையில்,அப்பகுதியில் உள்ள வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி மாநகராட்சி நிர்வாகத்தில் இடிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால்,இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த நிலையில்,தன்னுடைய வீடு இடிக்கப்படுவதை கண்டித்து அப்பகுதியில் வசித்து வந்த முதியவர் ஒருவர் நேற்று தீக்குளித்தார்.பின்னர்,உடனடியாக,தீ அணைக்கப்பட்டு முதியவர் மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து,தற்காலிகமாக வீடுகளை இடிக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில்,சென்னை ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான வழக்கு  உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில்,ஆக்கிரமிப்பு விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதால் நாளை விசாரணை நடைபெறுகிறது.