#BREAKING: ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள சீக்கியர்களை மீட்க பஞ்சாப் முதல்வர் கோரிக்கை!!

தலிபான்கள் கைப்பற்றியுள்ள ஆப்கானிஸ்தானில் 200க்கும் மேற்பட்ட சீக்கியர்களை மீட்க மத்திய அரசுக்கு, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தலிபான் கைப்பற்றியதற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் உள்ள குருத்வாராவில் சிக்கியுள்ள சுமார் 200 சீக்கியர்கள் உட்பட அனைத்து இந்தியர்களையும் உடனடியாக மீட்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். பஞ்சாப் அரசு, அவர்களின் பாதுகாப்பான வெளியேற்றத்தை உறுதிப்படுத்த தேவையான உதவிகளை வழங்க தயாராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்