#Breaking: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு – 6 மாதத்தில் முடிக்க உத்தரவு!!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் முடிக்க கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு உத்தரவு.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் முடிக்க கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து முடிக்க வேண்டும் என கூறியுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றச்சாட்டப்பட்டுள்ள அதிமுக நகர மாணவரணி முன்னாள் செயலாளர் அருளானந்தம் என்பவரின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும், சிபிஐ விசாரணைக்கு உதவும் வகையில் சிபிசிஐடி எஸ்பி முத்தரசியை நியமித்து சென்னை உய்ரநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்