BREAKING :2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது .!

  • இன்று 2-ம் கட்ட தேர்தல்  நடைபெற உள்ளது. இந்த தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
  • இன்று 46 ஆயிரத்து 639 பதவி இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் சென்னை உள்பட 10 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலை  2 கட்டங்களாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.காலியாக உள்ள 91 ஆயிரத்து 975 பதவி இடங்களுக்கு முதற்கட்ட தேர்தலில் 45 ஆயிரத்து 336 பதவி இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று 2-ம் கட்ட தேர்தல்  நடைபெற உள்ளது. இந்த தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இந்த தேர்தலில் 1 கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதியானவர்களாக உள்ளனர். ஒவ்வொரு வாக்காளர்களும் தலா 4 வாக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் கட்ட தேர்தலை விட 2-ம் கட்ட தேர்தலில் பதவி இடங்கள் அதிகம் என்பதால் வாக்குப்பெட்டிகள், வாக்குச்சாவடி மையங்கள், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று 46 ஆயிரத்து 639 பதவி இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

 

author avatar
murugan