#BREAKING: மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளை முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு.!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடந்த மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் பார்வையாளர் கணேசன் (53) என்பவர் உயிரிழந்துள்ளார். இதுவரை திருமயம் மஞ்சுவிரட்டில் மாடுபிடி வீரர் -9 பேர், மாட்டு உரிமையாளர் 12 பேர், பார்வையாளர் 4 பேர் என மொத்தமாக 25 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இவர்களில் 8 பேர் படு காயம் அடைந்துள்ளனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment