பாகிஸ்தானில் தாவூத் இப்ராஹிமின் இரண்டாவது மனைவி.! வெளியான அதிர்ச்சி தகவல்கள்.!

தாவூத் இப்ராஹிம் , பாகிஸ்தானில் பதான் சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என தாவூத் மருமகன் என்ஐஏ அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 

உலகின் தேடப்படும் குற்றவாளியாக இருந்து வரும் நிழல்உலக தாதா தாவூத் இப்ராஹிம் பற்றிய அதிர்ச்சி தகவலை அவரது மருமகன் தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) தெரிவித்தார்.

  தாவூத்தின் மறைந்த சகோதரி ஹசீனா பார்கரின் மகன் அலிஷா இப்ராஹிம் பார்கர் கூறுகையில், பாகிஸ்தானின் கராச்சியின் அப்துல்லா காசி பாபா தர்காவுக்கு அருகில் உள்ள ஓர் பாதுகாப்பான பகுதியில் தேடப்படும் குற்றவாளியான தவூத் இப்ராஹிம் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அவர் அளித்த வாக்குமூலத்தில், தாவூத் இப்ராஹிம் இரண்டாவது  திருமணம் செய்துகொண்டார் எனவும், அவர் மனைவி பாகிஸ்தானின் பதான் சமூகத்தை சேர்ந்தவர் என்பதையும் தாவூத் இப்ராஹிம் மருமகன் அலிஷா இப்ராஹிம் பார்கர் தெரிவித்தார்.

Leave a Comment