#BREAKING: மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளை முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு.!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடந்த மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் பார்வையாளர் கணேசன் (53) என்பவர் உயிரிழந்துள்ளார். இதுவரை திருமயம் மஞ்சுவிரட்டில் மாடுபிடி வீரர் -9 பேர், மாட்டு உரிமையாளர் 12 பேர், பார்வையாளர் 4 பேர் என மொத்தமாக 25 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இவர்களில் 8 பேர் படு காயம் அடைந்துள்ளனர்.

Leave a Comment