#BREAKING : தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு தேர்வு கட்டணம் இல்லை – தமிழக அரசு..!

தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு தேர்வு எழுதும் +2 மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்படுகிறது.

தமிழ் வழியில் படிக்கும் +2 மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்படுகிறது என தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா உத்தரவு பிறப்பித்துள்ளளார். 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை வசூலித்து ஜனவரி 20-க்குள் ஆன்லைனில் செலுத்த மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா தெரிவித்துள்ளார்.

மேலும், கண்பார்வையற்றவர்கள், காது கேளாதவர்கள் , வாய் பேச முடியாதவர்களுக்கும் தேர்வு கட்டணம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan