#BREAKING: லாலு பிரசாத்தின் முன்னாள் உதவியாளர் கைது!

பீகார் மாநிலம் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்தின் முன்னாள் உதவியாளர் போலா யாதவை சிபிஐ கைது செய்தது.

பீகார் மாநிலம் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, அவரிடம் சிறப்புப் பணி அதிகாரியாக (ஓஎஸ்டி) இருந்த போலா யாதவை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கைது செய்தது. லாலு பிரசாத் அமைச்சராக இருந்தபோது நடந்த பணி நியமன முறைகேடு வழக்கில் சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ரயில்வே ஆள்சேர்ப்பு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.

பீகாரில் சுமார் நான்கு இடங்களில் சிபிஐ சோதனையில் ஈடுபட்டு வருகிறது. பாட்னாவில் 2 இடங்களிலும், தர்பங்காவில் 2 இடங்களிலும் சோதனை நடந்து வரும் நிலையில், போலா யாதவ் இன்று காலை டெல்லியில் கைது செய்யப்பட்டார். பாட்னாவில் சோதனை செய்யப்படும் இடங்களில் ஒன்று போலா யாதவின் CA க்கு சொந்தமானது. யாதவ் 2004 மற்றும் 2009 க்கு இடையில் நடந்த ரயில்வே ஆட்சேர்ப்பு ஊழல் வழக்கின் முக்கிய நபர் என கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சரின் குடும்ப உறுப்பினர்களுக்கு பாட்னாவில் உள்ள முக்கிய சொத்துக்கள் விற்கப்பட்டன அல்லது அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ரயில்வே வேலைகளுக்கு ஈடாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் லாலு யாதவ், ராப்ரி தேவி, மிசா பார்தி உள்ளிட்டோர் மீது சிபிஐ கடந்த மே 18ஆம் தேதி எஃப்ஐஆர் பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment