#BREAKING: லக்கிம்பூர் விவகாரம் – மத்திய அமைச்சரின் மகனுக்கு ஜாமீன் ரத்து!

லக்கிம்பூரில் விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றிய வழக்கில் ஆசிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றியது தொடர்பான வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அலகாபாத் நீதிமன்றம் ஆசிஷ் மிஸ்ராவுக்கு வழங்கிய ஜாமீனை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்துள்ளனர். ஜாமீன் ரத்து செய்யப்பட்டதால் ஆசிஷ் மிஸ்ரா ஒரு வாரத்தில் சரணடையவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. லக்கிம்பூர் கேரியில் கடந்த அக்டோபரில் விவசாயிகள் நடத்தி அமைதி போராட்டத்தில் ஆசிஷ் மிஸ்ரா கார் மோதி 4 விவசாயிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்