#BREAKING : குட்கா ஊழல் வழக்கு – முன்னாள் டிஜிபிக்கு சம்மன்

குட்கா ஊழல் வழக்கில் டிசம்பர் 2-ஆம் தேதி  முன்னாள் தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு அமலாக்கத்துறைசம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு தமிழகத்தில் குட்கா புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் சட்டவிரோதமாக குட்கா புகையிலை பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு குட்கா தயாரிப்பு ஆலைகள் இயங்க அனுமதிப்பதாக புகார்கள் எழுந்தது.
இந்த நிலையில் குட்கா விற்பனை  மூல ரூ.639 கோடிக்கு சட்டவிரோத  பணப்பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறை வழக்கு பதிந்து,விசாரணை மேற்கொண்டு வருகிறது .இதனையடுத்து குட்கா ஊழல் வழக்கில்  டிசம்பர் 2-ஆம் தேதி விசாரணை நடத்த முன்னாள் தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.மேலும் கூடுதல் ஆணையர்  தினகரனுக்கு  டிசம்பர்  3-ஆம் தேதி விசாரணை நடத்த ஆஜராக வேண்டும் என்றும் சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை.
சிபிஐ இந்த குட்கா வழக்கில்  விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.மேலும் குட்கா வழக்கில் உரிமையாளர்கள்,பங்குதாரர்களின் ரூ.246 கோடி சொத்துக்கள் ஏற்கனவே முடக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.