Breaking:கண்ணகி – முருகேசன் தம்பதி ஆணவப்படுகொலை;13 பேர் குற்றவாளிகள் – கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு..!

கண்ணகி – முருகேசன் தம்பதி ஆணவக்கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

விருதாச்சலத்தில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த கண்ணகி – முருகேசன் ஆகிய இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்த நிலையில்,கடந்த 2003 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி உறவினர்களால் ஆணவக்கொலை செய்யப்பட்டனர்.மூக்கு,காது வழியாக விஷத்தை ஊற்றி இரண்டு பேரையும் உயிருடன் எரித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இதனையடுத்து,இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.அதன்படி,இந்த வழக்கை சிபிஐ விசாரித்து,குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்நிலையில்,கண்ணகி – முருகேசன் தம்பதி ஆணவக்கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என கடலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.