#BREAKING: ஜெயலலிதா சொத்து விவகாரம் நாளை தீர்ப்பு.!

ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு.

ஜெயலலிதாவின் ரூ.9.13 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி அதிமுக உறுப்பினர்கள் இருவர் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதியை நிர்வாகியாக நியமிக்க வேண்டும் எனவும் ஜெயலலிதாவின் சொத்துகளில் சிலவற்றை பொது மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது.

author avatar
Dinasuvadu desk