BIG BREAKING : ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்தார்.!

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தன்னுயிர் இழந்தார்.

இன்று பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, பிரச்சாரத்தில் பேசி கொண்டு இருக்கும் போது 41 வயது மதிக்கத்தக்க ஒரு நபரால் சுடப்பட்டார்.

இந்த செய்தி உலகம் முழுக்க காட்டுத்தீயாய் பரவியது. அவருக்கு என்னவாயிற்று, ஜப்பானில் என்ன நடக்கிறது என பலவாறு கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது,

துப்பாக்கி சூட்டில் மார்பில் காயமடைந்த ஷின்சோ அபேவுக்கு பாதுகாவலர்கள் முதலுதவி அளித்து மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை அளிக்கும்போதே அவருக்கு உடல் பாகங்கள் செயல் இழந்து வருவதாக கூறப்பட்டது.

அவர் உயிர்பிழைப்பாரா என உலக நாடுகள் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், தற்போது சோகமான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தன்னுயிர் இழந்தார் என்ற சோகமான செய்தி வெளியாகி உள்ளது. இது உலக நாடுகள் இடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment