#BREAKING: காஞ்சிபுரத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் மேலும் 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்க தலைமை செயலாளர் அறிவுறுத்தல்.

மாண்டஸ் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களுக்கும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்க தலைமை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். புயல் முன்னெச்சரிக்கை தொடர்பான ஆலோசனையின்போது மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment