சூர்யா, அர்ஜுன் ஆகியோரின் உடல்கள் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தேர்தலின் போது முன்விரோதம் காரணமாக அர்ஜுன், சூர்யா ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த இரட்டை கொலையை கண்டித்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சூர்யா, அர்ஜுன் ஆகியோரின் உடல்கள் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட அர்ஜுன் மற்றும் சூர்யா குடும்பத்தினருக்கு நிவாரண காசோலை வழங்கப்பட்டதையடுத்து, 4 நாட்களுக்கு பின் குடும்பத்தினர் உடலை பெற்றுக் கொண்டனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு வேலை வழங்கும் வரை மதம் ரூ.5,000 உதவித் தொகை வழங்கவும் நிவாரண ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.