#BREAKING : சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பணிமாற்றம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசு பல்வேறு துறை அதிகாரிகளை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளராக செந்தில்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்துறை செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் மாற்றப்பட்டு பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். வணிகவரித் துறை முதன்மை செயலாளராக / ஆணையராக தீரஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

வருவாய் நிர்வாக ஆணையராக பிரபாகரர் நியமிக்கப்பட்டுள்ளார். தொழிலாளர்கள் நலன் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நசிமுதீன் நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலாளராக ஆனந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த சிவராசு மாற்றப்பட்டு பிரதீப்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியராக சாந்தி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் ஆட்சியராக ஜானி டாம் வர்க்கீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார் மற்றும் பல அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment